மரம் எனும் வரம் – Delhi Poetry Slam

மரம் எனும் வரம்

By Nivetha Natarajan

காடுகள் அனைத்தும்
வீடுகள் ஆயின;

சோலைகள் அனைத்தும்
சாலைகள் ஆயின;

உணவுகள் அனைத்தும்
கனவுகள் ஆயின;

அதிகமான வெப்பநிலை
மனிதர்க்குப் பாவநிலை;

வெள்ளி போன்றது தண்ணீர்-அது
இன்றி வரும் கண்ணீர்;

மரகதம் போன்றவை மரங்கள்-அவை
இயற்கை அளித்த வரங்கள்;

தாய்ப்பால் தாயின் குருதி,
பூமியின் உதிரம் நதி;

தண்ணீரை வீணாய்ச் சிந்துகின்றாய்
பூமியின் குருதியை அழிக்கின்றாய்;

கொட்டிக் கிடக்கிறது இயற்கைச் செல்வம்-அதை
காக்க தேவையில்லைத் தவம்;

கோடாரியை தூர எறி;
மரம் வளர்க்க கொள்கை தறி !


Leave a comment