By Nirmala Chandrasekar

அம்மா அப்பா
ஆர்வ கோளாறு வயசு
இல்லறம்
ஈன்ற பிள்ளைகள்
என வாழ்க்கை சக்கரத்தில்
ஏராளமான பிரச்னைகளுடன்
ஐம்புலன்களுடன்
உற்சாகமாக
ஊரார் உற்றாருடன் கை கோர்த்து
ஒரு வரியில் சொல்ல முடியாத
பல விஷயங்கள் சந்தித்த காலம்
அது
ஓய்வெடுக்கும் வயோதிக்க காலத்தில்
ஔவை தந்த நெல்லிக்கனியாய்
அஃகாலம் நம் அனைவரின் பொக்கிஷம்
பொத்திக்காப்போம்